ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மரணத்தின் வலி















இதயம் சற்று
வேகமாய் துடிக்கிறது,
கண்ணுக்கெட்டிய
தொலைவு வரை
யாதும் புலப்படவில்லை.
கால்கள் ஓடிய
பாதை மறந்தது
ஈனஸ்வரத்தின்
கூச்சல் கேட்டிட
இமைகளுக்குள்ளே
ஈரம் கசிந்தது.
ஆறுதல் கூறிட
வார்த்தைகள் போரிட
காற்றின்றி அனைய
மறுக்கிறது தீபம்
மழையின்றி நனைய
மறுக்கிறது மீரம்
இறுக்கம் கைகளில்
இருட்டும் கண்களில்
மனமே ஆறிடு
இமையே மூடிடு
விருப்பம் இன்றி
மூச்சும் குன்றி
இதயம் துடித்து
முடிவாய் நின்றது

4 கருத்துகள்: