ஏனோ எனக்குள் தானடா – புது
வேகம் பிறந்தது ஏனடா
கோபம் உனக்குள் ஏனடா – அதை
கூண்டில் அடைப்பவள் நானடா
மனதினில் சிறு…சிறு…சிறு
இடம் கொடு மலர் மலர்ந்திட
கனவினில் தினம்…தினம்…தினம்
பழகிடு உயிர் கலந்திட
கத்தி இன்றி ரத்தமின்றி என்னுள்ளே
யுத்தமொன்றில் சுற்றுகின்ற போர் வீரா
– ஏனோ எனக்குள்
தேடல் உனக்குள் தானடா – அதைப்
பூவிடம் மறைப்பது வீணடா
சோகம் உனக்குள் ஏனடா – அதைப்
பகிர்ந்திட வருகிறேன் நானடா
வானத்தில் மேகங்கள் கூடிடக் கண்டேன்
வாசலில் கோலங்கள் நனைந்திட நின்றேன்
உனைத் தேடியே வந்தேன் – உன்
சிநேகிதி அன்பினைப் புரிவாயோ
உயிர் வழங்கு – உத்தரவே
உடன் வருவேன் – இக்கணமே
மஞ்சள் தாலி – ஒன்று எந்தன்
நெஞ்சில் குத்தும் வலியை
நித்தம் சுமந்து
உன் சகியை செத்துவிட
யோகம் எனக்குள் தானடா
அதை நீதான் தருவாய் மானுடா
பேதம் நமக்குள் ஏனடா
இந்த வேதம் சொல்வது மெய்யடா
– ஏனோ எனக்குள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக