வியாழன், 25 அக்டோபர், 2012

தங்கை…


















தங்கை என்ற உறவில்
அன்பாய் வந்த மங்கை நீ
அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் அழைத்திட
தங்கை என்றுனை
தத்துக்கொண்டேன்

முகமறியா நட்பில்
உன் அன்னைக்கு நானும்
என் அன்னைக்கு நீயும்
பிள்ளைகள் ஆனோம்

அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் முளைத்திட
முடிவில்லா இன்பத்தில்
முழுமூச்சும் மிதக்கிறது

என் எழுத்துக்களின் வழியே
நித்தமும் நீ நத்தையாய்
நடப்பதும்

என் எதுகையின் எதிரே
நித்தமும் நீ மோனையாய்க்
கிடப்பதும்

உனக்கின்பமெனில்
ஓயாமல் எழுதிடுவேன்
நீ மகிழ

உன் உறவு தந்த தமிழுக்கு
உருவம் தருகிறேன்
என் கவிதையின் மூலம்

விண் நிலவு தந்த இரவுக்கு
விடியல் தருகிறேன்
என் கண்களின் மூலம்

பிள்ளைத் தமிழில்
அண்ணா என்று நீ தினம்
அன்பாய்திக்கிட
உன் மெய்யான பேரன்பில்
நான் சிக்கிக் கொண்டேன்

என் குட்டிக் கவிதையை
நீ நித்தம் படிப்பதால்
தலை முட்டிக் குடைந்து
இக்குட்டிக் கவிதையை
தட்டித் தருகிறேன்
தங்கை உனக்கு…

கரும்பலகை


வெண்ணிற வார்த்தைகள்
பூத்திடும் நந்தவனமே
செந்நிற சிந்தனைகள்
சிந்திடும் தார்ச் சாலையே
எழுத்துக்கள் பிறப்பதும் தவழ்வதும்
கருத்துக்கள் வளர்வதும் செறிவதும்
கவிஞகர்கள் நடப்பதும் கடப்பதும்
கவிதைகள் உதிப்பதும் திரிவதும்
கற்பனைகள் அவிழ்வதும் தெறிப்பதும்
சாத்திரங்கள் அழிவதும் உடைவதும்
அறியாமை களைவதும்
அடங்காமை அணைவதும் வேறெங்கே
களிமண்ணும் கருங்கல்லும்
உன் வழித்தோன்றல்கள்
முதுகும் மேதியும்
உன் தடக் கூற்றுக்கள்
தென்னங்கீற்றும் பணையோலையும்
உன் முப்பாட்டன்கள்
வெள்ளி முளைக்கும் வானம் நீ
வாசல் தெளிக்கும் வீதி நீ
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
நம் தலைஎழுத்தும் வாழுதிங்கே
கட்டைவிரலும் சுட்டுவிரலும் ஆடுதிங்கே
முன் எத்தனையோ நாட்கள்
சிலேடும் மாக் குச்சியும்
தான் என் பால்ய நண்பர்கள்
என் எச்சில் பட்டே குளிப்பாய்
என் குட்டிப் பையில் கிடப்பாய்
மடியிலிட்டும், மண்டியிட்டும்,
உன்னில் எழுதிருக்கிறேன்
இனி காகிதமும் தூரிகையும்
தான் இரவும் பகலும்
என் உடன் விழித்திருக்கும்
வாலிப நண்பர்கள்
இன்றும் நினைவில் இருக்கிறது
“அ” பழகிய அந்த காலம்

நீயும் நீரும்











நீர் இன்றி தீராதோ தாகம்
நீ இன்றி போகாதோ நேரம்
விக்கலுக்கு நீர் போல்-மன
சிக்கலுக்கு நீ வேண்டும்

நீர் இன்றி பூக்காதோ பூக்கள்
நீ இன்றி தோன்றாதோ பாக்கள்
சித்திரைக்கு நீர் போல்-என்
நித்திரைக்கு நீ வேண்டும்

நீர் இன்றி அனையதோ நெருப்பு
நீ இன்றி குறையாதோ வெறுப்பு
கல்லனைக்கு நீர் போல்-என்
சிந்தனைக்கு நீ வேண்டும்

 நீர் இன்றி அமையாது உலகு-என்றும்
நீ இன்றி அடங்காது உயிரு

நீரும், நீயும் என் நீங்கா உறவுகள்

நீ நலமில்லை….
















எப்படி அறிவேன்
நீ நலமில்லை என்பதை
நீ வெறுத்துக் கொண்டே இருந்ததால்
நானும் பொறுத்துக் கொண்டே இருந்துவிட்டேன்
-
யாரென்ன சொன்னார்கள் உன்னை
யார்க்கும் தெரியாதே நீயும் நானும்
நெடுநாட்களாய் பேசிக்கொள்வதில்லை என்று
-
தற்செயலாய் தென்பட்ட உன் நாட்குறிப்பு
சொல்கிறது நீ நலமில்லை என்பதை
-
தூக்கத்திற்கு மருந்துன்பாய் இப்போது
துக்கத்திற்குமா?
-
மனம் விட்டு பேசேன்
என்னிடம்
நோய் விட்டுப் போய்விடும்
-
யாருமில்லை உனக்கு
என்னைத் தவிர
அடம் வேண்டாம்
இப்போது நீ நலமில்லை
-
ஆசைதான் எனக்கு உன்னை
உள்ளங்கையில் தாங்கிட
எப்படியோ போய்க் கொண்டிருக்கின்றது
நம் வாழ்க்கை
-
எத்தனை நாட்கள் தனியே புலம்பிடுவாய்
உன் நாட்குறிப்பில்
அது கேட்க மட்டுமே செய்யும்.
-
யாருமில்லை உனக்கு என்னைத் தவிர
அடம் வேண்டாம்
நீ இப்போது நலமில்லை
-
நான் யாரோ இல்லை நீதான்
கண் கொண்டு பார்
மனம் விட்டு பேசேன்
என்னிடம்
நோய் விட்டுப் போய்விடும்
கண்ணீராவது விடு
அதை துடைக்கும் சாக்கில்
நானே உன்னிடம் பேசுகின்றேன்
அடம் வேண்டாம்
இப்போது நீ நலமில்லை

அந்திவேளை



கவலை மறந்து
கண்கள் ஒய்ந்திடும் நேரம்
பசியை மறந்து
கனவுகள் போயிடும் தூரம்
-
கையில் பணமின்றி
காலில் பலமின்றி
பசியும், நோயும்
வந்தால் தூக்கமேது
இந்த அந்திவேளையில்
-
என்றுமே கண்டிராத நள்ளிரவு
நிலவும் இல்லாத பின்னிரவு
நொடிகள் கூட
யுகங்கள் போல நகர்கிறது
குவளை தண்ணீர்
அமிர்தம் போல இனிக்கிறது
-
வழியெங்கும்
வாடை காற்று
தவளை கூச்சல்
ஆந்தை முறைப்பு
வவ்வால் ஆட்டம்
எல்லாம் நிலைக்கிறது
-
உணர்வின்றி புலம்பிடும்
உதடுகளில் ஈரமில்லை
தூக்கமின்றி கிறங்கிடும்
விழிகளில் ஊக்கமில்லை
-
பற்றிக்கொள்ள கிளையுமில்லை
பாதி உயிரும் உடம்பில்லை
-
சுமைகளைத் தாங்கிட
ஜீவனில்லாத உடலுக்கு
ஏன் இந்தப் பிறவியோ
-
பேசத் துணையின்றி
தேடத் திறனின்றி
பசியும் நோயும் வந்தால்
இந்த அந்திவேளை
எப்படி விடிந்திடும்
-
அநாதையாய் பிறந்திருந்தால்
என்றோ இறந்திருக்கலாம்

திங்கள், 15 அக்டோபர், 2012

கரும்பலகை

வெண்ணிற வார்த்தைகள்
பூத்திடும் நந்தவனமே
செந்நிற சிந்தனைகள்
சிந்திடும் தார்ச் சாலையே
எழுத்துக்கள் பிறப்பதும் தவழ்வதும்
கருத்துக்கள் வளர்வதும் செறிவதும்
கவிஞர்கள் நடப்பதும் கடப்பதும்
கவிதைகள் உதிப்பதும் திரிவதும்
கற்பனைகள் அவிழ்வதும் தெறிப்பதும்
சாத்திரங்கள் அழிவதும் உடைவதும்
அறியாமை களைவதும்
அடங்காமை அணைவதும் வேறெங்கே
களிமண்ணும் கருங்கல்லும்
உன் வழித்தோன்றல்கள்
முதுகும் மேதியும்
உன் தடக் கூற்றுக்கள்
தென்னங்கீற்றும் பணையோலையும்
உன் முப்பாட்டன்கள்
வெள்ளி முளைக்கும் வானம் நீ
வாசல் தெளிக்கும் வீதி நீ
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
நம் தலைஎழுத்தும் வாழுதிங்கே
கட்டைவிரலும் சுட்டுவிரலும் ஆடுதிங்கே
முன் எத்தனையோ நாட்கள்
சிலேடும் மாக் குச்சியும்
தான் என் பால்ய நண்பர்கள்
என் எச்சில் பட்டே குளிப்பாய்
என் குட்டிப் பையில் கிடப்பாய்
மடியிலிட்டும், மண்டியிட்டும்,
உன்னில் எழுதிருக்கிறேன்
இனி காகிதமும் தூரிகையும்
தான் இரவும் பகலும்
என் உடன் விழித்திருக்கும்
வாலிப நண்பர்கள்
இன்றும் நினைவில் இருக்கிறது
"அ" பழகிய அந்த காலம்

திங்கள், 8 அக்டோபர், 2012

அந்தக் கோபத்தின் நியாயம்....

 என்று உன்னோடு
 எனக்கு நன்கு பரிச்சயம்;
 உன்னைப் பற்றிய எனது
 புரிதல்கள் சில
 உண்மையாக இருக்கலாம்;
 அப்படி அவை உண்மையாக
 இருக்கும் பட்சத்தில்
 உன்னை நான் நன்கு
 உணர்ந்துள்ளேன் என்பதை அறிவாய்;
 ஓசை கேட்க்காமல்
 பேசுவதும், நடப்பதும்
 உனக்கு மட்டும் வழக்கமல்ல;
 வீடும், அலுவலகமும் மட்டுமே
 உனது நாட்களை
 எண்ணிக்கொன்டிருக்கின்றன என்று ஓடிக்கொண்டிருக்கின்றாய்;
 யாரையும் கண்டிராமல்
 எப்படி இந்த கூட்டத்தை கடந்திருப்பாய்;
 உலகம் வேகமாய்
 போய்கொண்டிருக்கின்றது என்பது
 உன்னை விட
 எனக்கு நன்கு தெரியும்;
 அடக்கமாக இருந்து பழகியதும்,
 ஆசையை மறைத்து புலம்பியதும்
 உன் தவறில்லை;
 வறுமையும், கடமையும்;
 அச்சமும், வெட்கமும்
 கொஞ்சம் அதிகமாய்
 இருந்ததும் உன் தவறில்லை;
 ஏதும் உரைத்திடவோ,
 உணர்த்திடவோ
 முடியாத் தருணம் ..
 நியாயம் தான்
 நின் கோபம் ….

நான் யாரோ தான் உனக்கு….


















யாரோ நீ என்று விலகி

இருக்க முடியவில்லை

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

பார்த்திடும் தூரத்திலே உன் விழி

கேட்டிடும் தூரத்திலே உன் செவி

சேர்ந்திடும் தூரத்திலே உன் விரல்

பழகிடும் தூரத்திலே உன் நட்பு

என்ன செய்திட முடியும் என்னால்

உன்னைச் சுற்றி எப்போதும்

உன் நண்பர்கள் கூட்டம்

நிழல் போல உன்னை

விட்டு பிரிவதில்லை

உள்ளங்கைகளில் உன்னை

முப்பொழுதும் தாங்குகிறார்கள்

நீ விக்கிடும் நேரத்திற்காய்

கழுகாய் காத்திருக்கிறார்கள்

உனக்கு பிடித்திடும் விசயங்களை

முந்திச்செய்கிறார்கள்

உன்னை தொட்டுசிரித்து

பேசிட நினைக்கிறார்கள்

ஆகவே உன் கண்களில் நான்

அகப்படமாட்டேன்.

அவர்கள் உன்னை வட்டமிடும்

விண்மீன்களாகத் தெரியலாம்

உனக்கு,

ஆனால் என் கண்களுக்கு

அவர்கள் வெறும் மேகங்களே,

சீக்கிரம் உன்னைக்கடந்து

மறைவார்கள்.

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

காற்றைப்போல்

என்றும் எங்கும்

சுதந்திரமாய்இரு….