செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பூவினில் பிறந்தாய்










பூவினில் பிறந்தாய்
ஆழ்கடல் கடைந்தாய்
காற்றென நுழைந்தாய்
ஆற்றேன நிறைந்தாய்
வேல்விழி அம்பினால்
வேங்கையை வென்றாய்
பூவிதழ் சிரிப்பினால்
புது ரெத்தம் தந்தாய்

பாராது ஒதுங்கிய
சிலமுறை சந்திப்புகளில்
பார்த்துப் பதுங்கிய
உன் முத்து விழிகளின்
பலநாள் ஆசையை
மூடி மறைத்து
என்ன சுகம் கண்டாயோ!

பிறை நிலவு போல
தூக்கமிழந்து
பசும் புல்லைப் போல
பனியிலுரைந்து

சந்திக்க யோகமின்றி – உனை
சிந்திக்கும் நேரமெல்லாம்
சந்தோசம் சர்க்கரையாய் சங்கீதம் சங்கமிக்கும்

பேசாது ஒதுங்கிய
நம் கடைசி சந்திப்பில்
பேசிடத் துடித்திட்ட – உன்
சில நொடி சிந்திப்பை
நானின்றி யாரறிவாரோ!

பித்தனைப் போல
புத்தியிழந்து
புத்தனைப் போல
புகழையிழந்து

சிந்திக்க நேரமின்றி – உனை
சந்திக்கும் யோகமெல்லாம்
குறுநகை சிந்திடவே சித்தம் தன் பிணி அகலும்

நீ பூவினில் பிறந்தாய்………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக