புதன், 20 மார்ச், 2013

சிமிட்டல்கள்





ஒரு பானை சோத்துக்கு
ஒரு சோறு பதம் என்பார்கள்
இன்றும் பழமொழி இருக்கிறது 
பானைதான் இல்லை

யார் சொன்னது அரசு அலுவலகங்களில்
வேலைகள் சரிவர நடப்பதில்லை என்று... "மின்சார வாரியம்"

ஆயிரம் கூட்டங்களிடையே அமைச்சர் மாட்டுமல்ல
நானும் தான் என் வேலைக்காக... "சென்னை ட்ராபிக்"

சொன்னவர் நினைப்பார்
இது இவரிடம் மட்டுமே இருக்குமென்று... "ரகசியம்"

அனைய மறுக்கிறது தீபம்..."காற்றின் தீரம்"

திருதத்திற்க்காய் தட்டப்படுகிறது தலை..."தும்மல்"

என் கல்லறைக்காக நீ கொடுக்கும்
இன்பச்  சில்லறைகளோ இவைகள்..."புன் சிரிப்பு

வியாழன், 14 மார்ச், 2013

மூக்குத்திப் பெண்ணே


கொத்திக் கொத்திப் போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
பிஞ்சுக் குரலில் எனை
திட்டிக் கொண்டே கரம்
பற்றிக் கொண்டே போகின்றாய்
 
 
விக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே – என்
தொண்டைக் குழியில் உனை
வைத்துக் கொண்டே தினம்
திக்கிக் கொண்டே போகின்றேன்
 
 
பத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
நெத்திப் பொட்டில் எனை
சுத்திக் கொண்டே அதை
தொட்டுக் கொண்டே போகின்றாய்
 
 
வத்திக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே - உன்
எண்ணக் கடலில் தினம்
சிக்கிக் கொண்டே
தரை தட்டிக் கொண்டே போகின்றேன் 
 
 
தொத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
அச்சுக் குழலில் எனை
தச்சுக் கொண்டே மனம்
பிச்சுக் கொண்டே போகின்றாய்
 
 
மக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே – என்
மிச்ச உயிரில் உனை
மொய்த்துக் கொண்டே தினம்
பொய்த்துக் கொண்டே போகின்றேன்

புதன், 13 மார்ச், 2013

துட்டு வேணும் தம்பி...


உனக்காக நான் படும் பாட்டைத்தான்
இங்கே எல்லோரும் படுகிறார்கள்.
காலத்தைக் கூட வென்று விடலாம் போல
உன்னை வெல்ல முடியவில்லையே....
விதியைக் கூட மாற்றி விடலாம் போல
உன்னை மாற்ற முடியவில்லையே....
நல்ல உறவுகளைப் பிரிக்கிறாய்
நல்ல நினைவுகளை அழிக்கிறாய்
பத்தல்ல பத்தாயிரம் செய்கிறாய்
பாதாலமல்ல பரலோகமே பாய்கிறாய்
தவழ நீ தேவை
வளரவும் நீ தேவை
படிக்க நீ தேவை
பழகவும் நீ தேவை
மணக்க நீ தேவை
மதிக்கவும் நீ தேவை
பிறக்க நீ...
பிழைக்க நீ...
புதைக்கவும் நீ தேவைப்படுகிறாய்
உன்னை மிதிப்பவர்களை
நீ மதிக்கிறாய்
உன்னை மதிப்பவர்களை
நீ மிதிக்கிறாய்
நியாபகம் இருக்கட்டும்
வயிற்றில் பசி உள்ள வரை மட்டுமே
இம் மண்ணில் நீ
தெய்வமென பிழைத்து கிடப்பாய்