ஒரு சோறு பதம் என்பார்கள்…
இன்றும் பழமொழி இருக்கிறது
பானைதான் இல்லை…
யார் சொன்னது அரசு அலுவலகங்களில்
வேலைகள் சரிவர நடப்பதில்லை என்று... "மின்சார வாரியம்"
ஆயிரம் கூட்டங்களிடையே அமைச்சர் மாட்டுமல்ல
நானும் தான் என் வேலைக்காக... "சென்னை ட்ராபிக்"
சொன்னவர் நினைப்பார்
இது இவரிடம் மட்டுமே இருக்குமென்று...
"ரகசியம்"
அனைய மறுக்கிறது தீபம்..."காற்றின் தீரம்"
திருதத்திற்க்காய் தட்டப்படுகிறது தலை..."தும்மல்"
என் கல்லறைக்காக நீ கொடுக்கும்
இன்பச் சில்லறைகளோ இவைகள்..."புன் சிரிப்பு"


