நடந்து முடிந்ததை நினைத்து நினைத்து
பொழுதும் வீணாய் போகிறது
நடக்க இருப்பதை நினைத்து நினைத்து
மனதும் பாழாய் போகிறது
எதனை கடந்தோம் இன்று வரை
எதனை முடித்தோம் இன்று வரை
குறைகளை சொல்லி சொல்லி
அவைகளே எஞ்சிக் கிடக்கிறது
புண்ணியம் தேடித் தேடி
புண்களே மிஞ்சிக் கிடக்கிறது
வலிகளை சுமக்கிறவன்
வாழ்க்கையை ரசிக்கிறான்
விழிகளை ரசிக்கிறவன்
வாழ்க்கையை சுமக்கிறான்
மெய்களை பொசுக்கி பொசுக்கி
பொய்களில் பரவிக் கிடக்கிறோம்
அமைதியை பழக்கி பழக்கி
அகதியாய் அஞ்சிக் கிடக்கிறோம்
ஆசைகளை துறந்தவன்
வீதிகளில் அலைகிறான்
வீதிகளில் அலைகிறவன்
ஆசைகளில் புரளுகிறான்
அடிமையைப் போலவே நாளும் உழைப்பவன்
மெழுகினைப் போலவே நாளும் கரைகிறான்
ஆதவன் போலவே நாளும் எழுபவன்
வாரிதம் போலவே இறுதியில் கலைகிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக