திங்கள், 8 அக்டோபர், 2012

அந்தக் கோபத்தின் நியாயம்....

 என்று உன்னோடு
 எனக்கு நன்கு பரிச்சயம்;
 உன்னைப் பற்றிய எனது
 புரிதல்கள் சில
 உண்மையாக இருக்கலாம்;
 அப்படி அவை உண்மையாக
 இருக்கும் பட்சத்தில்
 உன்னை நான் நன்கு
 உணர்ந்துள்ளேன் என்பதை அறிவாய்;
 ஓசை கேட்க்காமல்
 பேசுவதும், நடப்பதும்
 உனக்கு மட்டும் வழக்கமல்ல;
 வீடும், அலுவலகமும் மட்டுமே
 உனது நாட்களை
 எண்ணிக்கொன்டிருக்கின்றன என்று ஓடிக்கொண்டிருக்கின்றாய்;
 யாரையும் கண்டிராமல்
 எப்படி இந்த கூட்டத்தை கடந்திருப்பாய்;
 உலகம் வேகமாய்
 போய்கொண்டிருக்கின்றது என்பது
 உன்னை விட
 எனக்கு நன்கு தெரியும்;
 அடக்கமாக இருந்து பழகியதும்,
 ஆசையை மறைத்து புலம்பியதும்
 உன் தவறில்லை;
 வறுமையும், கடமையும்;
 அச்சமும், வெட்கமும்
 கொஞ்சம் அதிகமாய்
 இருந்ததும் உன் தவறில்லை;
 ஏதும் உரைத்திடவோ,
 உணர்த்திடவோ
 முடியாத் தருணம் ..
 நியாயம் தான்
 நின் கோபம் ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக