சிரிக்கிறாய்
அனலாய்
முறைக்கிறாய்,
-
அழைக்கிறாய்
விழியால்
வளைக்கிறாய்,
-
தெரிகிறாய்
பின்
மறைகிறாய்,
-
கொடுக்கிறாய்
பின்
பறிக்கிறாய்,
-
என்ன செய்வதாக உத்தேசம்…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ…
-
விதைக்கிறாய்
மனதை
கரைக்கிறாய்,
-
வதைக்கிறாய்
கனவை
சிதைக்கிறாய்,
-
நெருங்கினாய்
சொல்லத்
தயங்கினாய்
-
விரும்பினாய்
பின்
விலகினாய்
-
குழம்பினாய்
பின்
கலங்கினாய்,
-
என்ன ஆனது உனக்கு…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக