செவ்வாய், 18 டிசம்பர், 2012

காற்றோடு சண்டை
















சிரிக்கிறாய்
அனலாய்
முறைக்கிறாய்,
-
அழைக்கிறாய்
விழியால்
வளைக்கிறாய்,
-
தெரிகிறாய்
பின்
மறைகிறாய்,
-
கொடுக்கிறாய்
பின்
பறிக்கிறாய்,
-
என்ன செய்வதாக உத்தேசம்…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ…
-
விதைக்கிறாய்
மனதை
கரைக்கிறாய்,
-
வதைக்கிறாய்
கனவை
சிதைக்கிறாய்,
-
நெருங்கினாய்
சொல்லத்
தயங்கினாய்
-
விரும்பினாய்
பின்
விலகினாய்
-
குழம்பினாய்
பின்
கலங்கினாய்,
-
என்ன ஆனது உனக்கு…
-
ஆற்றோடு அன்பை விட்டாயோ,
காற்றோடு சண்டை இட்டாயோ

சனி, 8 டிசம்பர், 2012

அழையா விருந்தாளிகள்













அந்த கடற்கரையின்
புழுதி கிளம்பாத
ஈரமணலில்
என்னை நானே தொடர்கின்றேன்
-
அலையும் கடலெச்சத்தில்
என் கால்கள் இரண்டையும்
அவிழ்த்து விட
துள்ளிக் குதித்தன அவைகள்
-
ஐம்புலன்களும்
நனைந்து நடுங்கிட
ஈர உடலில்
காதல் கொண்ட கீழைக் காற்று
மெல்ல அனணத்தது
-
பற்கள் கட கட
சொற்கள் தட தட
உள்ளங்கைகளில்
நெருப்பினை கொடுத்தாலும்
பொக்கிசமாய்
பொத்திக் கொள்வேன் போல
அப்படி ஓர் குளிர்
-
அவ்விடம் விட்டு
நகர்கிறேன்
அழையாது ஒட்டிக்கொண்ட
களவாணி மணல் துகள்களை
என்ன செய்வது…
-
தட்டி விட மனமில்லை
ஆகவே உடனழைத்துச் சென்றேன்
என்றும் மிதிக்கப்படும்
அவர்கள்
அன்று மதிக்கப்பட்டு
என் வீட்டின் விருந்தாளி ஆனார்கள்….

அதே இடம் அதே நொடி












நீ அங்கே வரக்கூடும் என்பதால்
நானும் அங்கு இருப்பேனோ
என்று உன் உள் மனம் வேகமாய்
அசை போட்டுக்கொண்டிருக்கும்
-
இன்று என்ன செய்யலாம்!!!
பார்த்தால் பார்க்கலாமா? பதுங்கலாமா?
சிரித்தால் சிரிக்கலாமா? சுளிக்கலாமா?
என பூவா தலையா? போட்டுக்கொண்டே
பூவும் தலையுடன்
அவ்விடம் நோக்கி வந்துகொண்டிருப்பாய்
-
கூட்டத்தில் நான் தேடிடக்கூடும்
என்பதற்க்காகவே எப்போதும் உடுத்தும்
அந்த நீல வண்ணச் சேலையில்
அவ்விடம் நெருங்கிடுவாய்
-
ஆயிரம் சப்தங்கள் காதைத் துளைத்திடும் போதும்
அந்த இடத்தில் உன் மூச்சின் ஓசை எப்படியோ
எனக்கு கேட்டுவிடுகின்றது
நீ காட்டிக் கொடுக்கப்படுகின்றாய்
-
நெடு நேரங்கள்
நீ பார்த்திடும் போது நானும்
நான் பார்த்திடும் போது நீயும்
பார்த்துக்கொள்வதில்லை
-
முடிவாய் நீயும் நானும்
நேர்கோட்டில் பார்த்துக்கொள்ளும்
அச்சிறு நொடிகளால்
அன்றைய தினம்
அன்றைய கணம்
நீயும் நானும் நாமகிவிடுகிறோம்
-
இதுபோதுமென்று
மனங்கள்
அமைதியாய் உறங்கிடும்
நாளைக்கான
அதே இடத்தில்
அதே நொடிக்காக