ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

சொல்வதெல்லாம் உண்மை




பார்த்தா தான் அது கண்ணு;
சிரிச்சா தான் அது பொண்ணு

பசிச்சா தான் அது வயிறு;
போனா தான் அது உயிரு

கேட்டா தான் அது காது;
கெடுத்தா தான் அது சூது

விரிச்சா தான் அது பாயி;
கொலச்சா தான் அது நாயி

இனிச்சா தான் அது நாக்கு;
பலிச்சா தான் அது வாக்கு

கடிச்சா தான் அது பல்லு;
வளைச்சா தான் அது வில்லு

நடந்தா தான் அது காலு
திரிஞ்சா தான் அது பாலு

கொடுத்தா தான் அது கையி;
தெளிச்சா தான் அது மையி

கோர்த்தா தான் அது மாலை;
வேர்த்தா தான் அது வேலை

சேர்த்தா தான் அது காசு;
சேர்ந்தா தான் அது தூசு

பறந்தா தான் அது பருந்து;
கசந்தா தான் அது மருந்து

பிரிச்சா தான் அது பாகம்;
பிரிஞ்சா தான் அது சோகம்

வடிச்சா தான் அது சோறு;
புளிச்சா தான் அது மோரு

உரிச்சா தான் அது தோலு;
அரைச்சா தான் அது தூளு

பதிச்சா தான் அது பேரு;
பதிஞ்சா தான் அது தேரு

விட்டா தான் அது நட்டம்;
தொட்ட தான் அது மட்டம்

விழுந்தா தான் அது மழ;
எழுந்தா தான் அது வெத

குடிச்சா தான் அது தண்ணி;
குளிக்காட்டி அது பண்ணி

புரிஞ்சா தான் அது நட்பு;
புரியாட்டி அது தப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக