வியாழன், 25 அக்டோபர், 2012

தங்கை…


















தங்கை என்ற உறவில்
அன்பாய் வந்த மங்கை நீ
அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் அழைத்திட
தங்கை என்றுனை
தத்துக்கொண்டேன்

முகமறியா நட்பில்
உன் அன்னைக்கு நானும்
என் அன்னைக்கு நீயும்
பிள்ளைகள் ஆனோம்

அண்ணா என்று நீ – தினம்
அன்பாய் முளைத்திட
முடிவில்லா இன்பத்தில்
முழுமூச்சும் மிதக்கிறது

என் எழுத்துக்களின் வழியே
நித்தமும் நீ நத்தையாய்
நடப்பதும்

என் எதுகையின் எதிரே
நித்தமும் நீ மோனையாய்க்
கிடப்பதும்

உனக்கின்பமெனில்
ஓயாமல் எழுதிடுவேன்
நீ மகிழ

உன் உறவு தந்த தமிழுக்கு
உருவம் தருகிறேன்
என் கவிதையின் மூலம்

விண் நிலவு தந்த இரவுக்கு
விடியல் தருகிறேன்
என் கண்களின் மூலம்

பிள்ளைத் தமிழில்
அண்ணா என்று நீ தினம்
அன்பாய்திக்கிட
உன் மெய்யான பேரன்பில்
நான் சிக்கிக் கொண்டேன்

என் குட்டிக் கவிதையை
நீ நித்தம் படிப்பதால்
தலை முட்டிக் குடைந்து
இக்குட்டிக் கவிதையை
தட்டித் தருகிறேன்
தங்கை உனக்கு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக