செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வயக்காட்டு கீதம்

தை மாசம் பொறக்கணுமே
கவலை யெல்லாம் பறக்கணுமே
பொற்க் காலம் பூக்கணுமே
புது வெளிச்சம் தெரியணுமே

நெத்தியில சுட்ட வேர்வ
பச்ச நெலம் சேரணுமே
பாடு பட்டு வெதச்சதெல்லாம்
மணி மணியா வெளயணுமே

அந்தியில பெஞ்ச மழை
நஞ்சை யெல்லாம் மிஞ்சணுமே,
ஓடக்காடு பள்ள மெல்லாம்
பச்சத் தண்ணி நெறயணுமே

ஆத்தில மெல்ல தாமரப்பூ
எட்டி எட்டிப் பார்க்கணுமே
காத்தில தென்ன இல
கொஞ்சி கொஞ்சி பேசணுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக