தை மாசம் பொறக்கணுமேகவலை யெல்லாம் பறக்கணுமேபொற்க் காலம் பூக்கணுமேபுது வெளிச்சம் தெரியணுமே
நெத்தியில சுட்ட வேர்வபச்ச நெலம் சேரணுமேபாடு பட்டு வெதச்சதெல்லாம்மணி மணியா வெளயணுமே
அந்தியில பெஞ்ச மழைநஞ்சை யெல்லாம் மிஞ்சணுமே,ஓடக்காடு பள்ள மெல்லாம்பச்சத் தண்ணி நெறயணுமே
ஆத்தில மெல்ல தாமரப்பூஎட்டி எட்டிப் பார்க்கணுமேகாத்தில தென்ன இலகொஞ்சி கொஞ்சி பேசணுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக