ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஆத்திச்சூடி-2012


அன்பை விதைத்து நீரிடு – அதில்
ஆணவம் புதைத்து மூடிடு
இலக்கை நோக்கி விரைந்திடு – உனை
ஈன்றவள் கால்களை தொழுதிடு
உண்மை வென்றிட உரமிடு
ஊழல் களைகளை தகர்த்திடு
எண்ணம் உயர்ந்திட படித்திடு
ஏற்றம் அடைந்திட உழைத்திடு
ஐயம் நீங்கிட தெளிந்திடு
ஒழுக்கம் சேர்ந்திட உதவிடு
ஓசை கேட்டிட முழங்கிடு
ஔவைத் தமிழை வணங்கிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக