திங்கள், 12 நவம்பர், 2012

அழகும் அமைதியும்











அற்புதமான தருணம் அது.......
உன்னோடு
நெடுந்தூரப் பயணம் செய்த
அச்சிறு நொடிகள்
-
எப்போது
நினைவில் வந்தாலும்
ஒரு நொடி சந்தோசத்துடன்
ஒரு துளி கண்ணீரையும்
பரிசளித்திடும்
எனக்கு
-
நிழல் போல் எத்தனை முறை
பின் தொடர்ந்திருப்பேன்
பிறை போல் எத்தனை முறை
எதிர் வந்திருப்பேன்
-
உன் அத்தனை
பாவனைகளும்
ஆழப் பதிந்து விட்டது
என் நெஞ்சில்
-
அவற்றில் சில
புன்னகைகள்
இன்றும் என் பிணிக்கு மருந்துதான்
-
அவற்றில் சில
கோபங்கள்
இன்றும் என் வழிக்கு வெளிச்சம்தான்
-
ஈரம் கசிந்த அந்தப்
பார்வை ஒன்றுதான்
என்றும் என்னைக்
காயப்படுத்திக் கொண்டே
இருக்கின்றது.
-
உன் நெற்றியின் பொட்டாக
உலகம் சுருங்கி விட்டது
எனக்கு.
-
மிக்க நன்றி
என் வாழ்வில்
வந்தமைக்கு
-
இனி என்றும் பூக்காது
உன்போல் பூக்கள் இங்கு
-
என்ன தவம் செய்யவில்லை
நீயும் நானும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக