ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இங்கும் அங்கும்



முகவரி தந்தாய்
நிமிடங்கள் கொல்ல
இரு விழிச் சுடர்
வளைக்குது மெல்ல
குளிர்ச்சிகள் கண்ணில்
குழப்பங்கள் நெஞ்சில்
மறந்திட எண்ணி
மறைகிறாய் கண்ணில்
இறக்கங்கள் இன்றி
இறக்கிறேன் மண்ணில்
உறவுகள் இல்லை
உரிமைகள் இல்லை
இரவுகள் எல்லாம்
உறக்கங்கள் இல்லை; 
கனவுகள் எல்லாம்
தருகிறாய் தொல்லை
முறை தானோ!
சிரிப்பதும் நீயே!
முறைப்பதும் நீயே!
நினைவுகள் எங்கும்
திரிவதும் நீயே!
நீ மட்டும் தூங்கு நலமாக!

2 கருத்துகள்: