கோவிலின் உள்ளே
நீ என்னைப் பார்க்காமல்
இருப்பதற்க்கே சற்று
ஒதுங்கி நின்றிருந்தேன்.
இப்போது
நீ என்னை கடந்து
போய்க் கொண்டிருக்கிறாய்.
உனது
ஒவ்வொரு அசைவுகளும்
மீட்டிடும் வீணையின்
அதிர்வுகளாக என் நெஞ்சில்
விழுகின்றன.
உன்னைப் பொருத்தவரை
நான் யாரோ தான்.
காரணமே இல்லாமலா
சிரிப்பதும் முறைப்பதுமாய்
இருந்திருப்பாய்.
காரணமே இல்லாமலா
பார்ப்பதும், அலைவதுமாய்
இருந்திருப்பேன்.
கைகளை குவித்து
கண்களை மூடி
யாருக்காக வெகு நேரம்
வேண்டிக் கொண்டிருக்கிறாய்
என்னைப் போல
உனக்காகவா?
கூட்டம் வருகிறது
விழி நீரை
துடைத்துக்கொள்
என் போல்.
பிரகாரத்தை சுற்றும் போது
முன்பெல்லாம் நாம்
பார்த்து ரசித்த நிலைக்கண்ணாடி
இன்று நீ பார்க்கவில்லை
நான் பார்த்தேன்.
தூண்களின் பின்புறம்
நானிருக்கிறேன் என்பதை
சுற்றிடும் கிளிகள்
விவரமாய் சொல்கிறது
கிளி பாசை
மறந்திருப்பாய் நீ…
இந்த ஊரும், இந்தக் கோவிலும்
இன்றும் அழகாகத்தான்
இருக்கிறது
உன்னைப் போல….
கோவிலை விட்டு
வெளியேறுகிறாய்.
உதிர்ந்த உனது
பூக்களைத் தவிர
என்னிடம் வேறேதுமில்லை
இந்த ஊரும், இந்தக் கோவிலும்
இன்றும் அமைதியாகத்தான்
இருக்கிறது
உன்னைப் போல…..

நல்லா இருக்கு நண்பா...
பதிலளிநீக்குகாரணமே இல்லாமலா
சிரிப்பதும் முறைப்பதுமாய்
இருந்திருப்பாய்.
காரணமே இல்லாமலா
பார்ப்பதும், அலைவதுமாய்
இருந்திருப்பேன்.
ரசிக்க வைத்த வரிகள்
Nandri Nanba....
நீக்கு