வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பட்டினத்து வாசிகள்


என்னதான் செய்கிறார்கள்
இந்த பட்டினத்து வாசிகள்
அதிகாலை எழுவதுண்டா?
குளிர் நீரில் குளிப்பதுண்டா?
கூந்தல் முடிவதுண்டா? அங்கே
பூக்கள் சூடுவதுண்டா?
வாசல் தெளிப்பதுண்டா? அரிசிக்
கோலம் இடுவதுண்டா?
தரையில் அமர்வதுண்டா?
மழையில் நனைவதுண்டா?
கதவைத் திறப்பதுண்டா?
சுற்றம் மதிப்பதுண்டா?
மொட்டை மாடி தூக்கம் உண்டா?
விண்மீன் கூட்டம் ரசித்ததுண்டா?
அம்மிக்கல்லில் அரைத்ததுண்டா?
கும்மித்துணியை துவைத்ததுண்டா?
கையில் சோறு உண்பதுண்டா?
கஞ்சி கரைத்து குடித்ததுண்டா?
பிச்சை கொடுப்பதுண்டா?
பிள்ளை வளர்ப்பதுண்டா?
உழைத்து உயர்ந்ததுண்டா?
பகிர்ந்து பிழைத்ததுண்டா?
கடைக்கு நடப்பதுண்டா?
மிதிவண்டி பயணம் உண்டா?

பண்டிகைக்கு மட்டுமே
வேட்டியும் சேலையும்

பார்வைக்கு மட்டுமே
அன்பும் பாசமும்

வசதிக்கு மட்டுமே
பண்பும் பழக்கமும்


கணினியும், தொலைக்காட்சியும்
அலைபேசியும், வலைத்தளங்களுமே
இவர்களின் பிரியா நண்பர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக