வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

காதல் சோதனை


வீடே கதியென்று
நாளும் அடைந்திருந்தாள்
ஆடலும் ஓடலுமாய் முற்றத்தில்
அலைந்திருந்தாள்

மங்கை என்றானதும்
உலகம் இருண்டு
சற்றே சுருங்கியது
சேலை உடுத்தி
ஓரமாய் அமர்த்தப்பட்டாள்

காதலில் கலந்திட்ட
தோழியைக் கண்டு
தேடலில் மிதந்தாள்

பார்ப்பதும், முறைப்பதும்
சிரிப்பதும் ரசிப்பதுமாய்
யாவும் பழகி வந்தாள்

காதல் காவியங்கள்
தேடிப்படித்ததில் தலைவன்
ஒருவன் முடிவாய் அகப்பட்டான்

எண்ணங்கள் முழுவதும்
அவனையே நிறைத்தாள்

முந்திச் சென்று
மெதுவாய் நடந்தாள்

அரும்பாய் சிரித்து
அன்பினைக் கவர்ந்ததாள்

காந்த விழிகளால்
காவலில் வைத்தாள்

மறைந்து நின்று
கலவரம் செய்தாள்

கண்ணீர் விட்டு
கலங்கி நின்றாள் – ஆதரவானான்

கைகள் தொட்டு
காதலை சொன்னாள் – காவலனானான்

பரிசுகள் தந்தாள் – பைத்தியமானான்

அக்கறை கொண்டாள்
ஐக்கியமானான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக