வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வேறேது வேண்டும்

சற்றும் நிமிர்ந்திடாத முன்தலை
சுற்றும் அலைந்திடாத கண்கள்
முற்றும் மலர்ந்திடாத புன்னகை
கற்றும் பகிர்ந்திடா செந்தமிழ்
நிமிர்ந்து,
நோக்கி,
சிரித்து,
பேசி,
என்னுடன்
நடந்ததை
எப்படி மறப்பேன்

விண்ணில் மிதந்த
விண்மீன்கள்
மண்ணில் கண்டேனன்று

இதற்க்கு முன் என் கண்களுக்கு
இப்படி ஓர் குளிர்ச்சி இல்லை
இதற்க்கு முன் என் கண்களுக்கு
இப்படி ஓர் எழுச்சி இல்லை

பல கோடி பிரச்சனைகளை
சாகடித்த சில நொடி நேரமது

துணையின்றி தான் வந்தேன்
அந்தச் சாலையில்

குடையின்றி தான் வந்தேன்
அந்தச் சாரலில்

உறவின்றிப் போனாலும்
சுகமின்றிப் போனாலும்
அன்பு துணை ஒன்று
நீ இருக்க
வேறேது வேண்டும் சகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக