முளைத்து எழுந்த நாள் முதலாய்,
சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன்.
தினமும்
உண்ண மறப்பதில்லை,
இரவில் விழித்து பழக்கமில்லை,
உயிர்த்தெழுந்த நாள் முதலாய்
நான் … நான் தான்
எதற்க்காக விதைக்கப் பட்டேன்.
கனவுகள் எதற்கு,
உறவுகள் எதற்கு,
ஞாலமே நோக்கும்
விண் நிலவு போல,
என்னையும் நோக்கும்
காலத்திற்க்காகத் தான்
காத்திருக்கிறேன்.
முயற்சிக்க விரும்பிய
என் கனவுகள்,
முயன்றும் – அவை
முடியாது போகும் போதும்,
புரிந்தும் – அவை
புரியாது போகும் போதும்,
கலங்கிடுவேனோ – மனம்
தளர்ந்திடுவேனோ.
ஞாலமே நோக்கும்
விண் நிலவு போல,
என்னையும் நோக்கும்
காலத்திற்க்காகத் தான்
இந்த உயிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக