சொல்லாமல் விடிந்திடும் இரவு
சொல்லாமல் பெய்திடும் மழை
சொல்லாமல் புரிந்திடுமோ வாழ்க்கை ?
நில்லாமல் கலைந்திடும் முகில்
நில்லாமல் அலைந்திடும் அலை
நில்லாமல் துடித்திடுமோ இதயம் ?
இல்லாமல் இழுத்திடும் காற்று
இல்லாமல் அணைத்திடும் குளிர்
இல்லாமல் கடந்திடுமோ துயர் ?
பிரியாமல் தொடர்ந்திடும் நிழல்
பிரியாமல் தெரிந்திடும் நிலா
பிரியாமல் அடங்கிடுமோ உயிர் ?
எப்போதும் எரித்திடும் வெயில்
எப்போதும் சிரித்திடுமோ வயல்!!!!
எப்போதும் பசித்திடும் வயிறு
எப்போதும் கிடைத்திடுமோ சோறு!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக