சனி, 11 ஆகஸ்ட், 2012

எப்போதும் கிடைத்திடுமோ சோறு




சொல்லாமல் விடிந்திடும் இரவு

சொல்லாமல் பெய்திடும் மழை

சொல்லாமல் புரிந்திடுமோ வாழ்க்கை ?



நில்லாமல் கலைந்திடும் முகில்

நில்லாமல் அலைந்திடும் அலை

நில்லாமல் துடித்திடுமோ இதயம் ?



இல்லாமல் இழுத்திடும் காற்று

இல்லாமல் அணைத்திடும் குளிர்

இல்லாமல் கடந்திடுமோ துயர் ?



பிரியாமல் தொடர்ந்திடும் நிழல்

பிரியாமல் தெரிந்திடும் நிலா

பிரியாமல் அடங்கிடுமோ உயிர் ?



எப்போதும் எரித்திடும் வெயில்

எப்போதும் சிரித்திடுமோ வயல்!!!!

எப்போதும் பசித்திடும் வயிறு

எப்போதும் கிடைத்திடுமோ சோறு!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக