பயணத்திற்காக முன்கூட்டியே கிளம்பும் போதும்,
கனவுகளுக்காக அதிசயமாய் தூங்கும் போதும்,
காதலில் காத்திருக்கும் போதும்,
காய்ச்சலில் சாய்ந்திருக்கும் போதும்,
நண்பர்களின்றி ஊர் சுற்றும் போதும்,
திருவிழாவின்றி ஊர் வந்த போதும்,
காசில்லாமல் பசிக்கும் போதும்,
மின்விளக்கின்றி படிக்கும் போதும்,
திங்கள் ஆமையாய் போகும் போதும்,
வெள்ளி வெருதாய் போகும் போதும்,
மதிய வகுப்பில் மறைந்திருக்கும் போதும்,
செமஸ்டர் லீவில் அடைந்திருக்கும் போதும்,
ப்ராஜெக்ட் இல்லாமல் பென்ச்சில் இருக்கும் போதும்,
பேப்பர் போட்டு ப்ரொஜெக்டில் இருக்கும் போதும்,
என்னவோ தெரியவில்லை……..
நாளும் பொழுதும்,
நொடியும் முள்ளும்
வேகமாய் நகருவதில்லை …….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக