ஞாயிறு, 27 ஜனவரி, 2013

உனக்கென










உனக்கென தினம் தினம்
உதிக்கிறேன் அந்தி வெண்ணிலவே
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்
-
நதியில் விழுந்து; மணலில் கரைந்து
காண வந்தேன் உன்னைத் தேடி வந்தேன்
மழையில் நனைந்து; கடலில் கலந்து
பாதம் கண்டேன் உன்னுள் வாதம் கொண்டேன்
தினம் இரவில் விழித்து…
-
-
மழையானவள்;
அலையானவள்
என்று என்னையிவள் சேர்ந்திழுப்பாளோ
-
கனவாகிறாள்;
விதையாகிறாள்
என்று…………எனக்கிவள் உறவும் ஆவாள்
-
கோதையே என் சீதையே
எனை தெரிந்துகொள் – கொஞ்சம்
புரிந்துகொள்
கவிதையே என் கவிதையே
எனை எடுத்து சொல் – மெல்ல
தொடுத்து செல்…
-
காற்றாகவே நுழைந்தவள்
ஆற்றாகவே நிறைகிறாள்
வேராகவே புதைந்தவள்
பூவுமாகி மணக்கிறாள்
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
தினம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக