சனி, 8 டிசம்பர், 2012
அதே இடம் அதே நொடி
நீ அங்கே வரக்கூடும் என்பதால்
நானும் அங்கு இருப்பேனோ
என்று உன் உள் மனம் வேகமாய்
அசை போட்டுக்கொண்டிருக்கும்
-
இன்று என்ன செய்யலாம்!!!
பார்த்தால் பார்க்கலாமா? பதுங்கலாமா?
சிரித்தால் சிரிக்கலாமா? சுளிக்கலாமா?
என பூவா தலையா? போட்டுக்கொண்டே
பூவும் தலையுடன்
அவ்விடம் நோக்கி வந்துகொண்டிருப்பாய்
-
கூட்டத்தில் நான் தேடிடக்கூடும்
என்பதற்க்காகவே எப்போதும் உடுத்தும்
அந்த நீல வண்ணச் சேலையில்
அவ்விடம் நெருங்கிடுவாய்
-
ஆயிரம் சப்தங்கள் காதைத் துளைத்திடும் போதும்
அந்த இடத்தில் உன் மூச்சின் ஓசை எப்படியோ
எனக்கு கேட்டுவிடுகின்றது
நீ காட்டிக் கொடுக்கப்படுகின்றாய்
-
நெடு நேரங்கள்
நீ பார்த்திடும் போது நானும்
நான் பார்த்திடும் போது நீயும்
பார்த்துக்கொள்வதில்லை
-
முடிவாய் நீயும் நானும்
நேர்கோட்டில் பார்த்துக்கொள்ளும்
அச்சிறு நொடிகளால்
அன்றைய தினம்
அன்றைய கணம்
நீயும் நானும் நாமகிவிடுகிறோம்
-
இதுபோதுமென்று
மனங்கள்
அமைதியாய் உறங்கிடும்
நாளைக்கான
அதே இடத்தில்
அதே நொடிக்காக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக