சனி, 8 டிசம்பர், 2012

அழையா விருந்தாளிகள்













அந்த கடற்கரையின்
புழுதி கிளம்பாத
ஈரமணலில்
என்னை நானே தொடர்கின்றேன்
-
அலையும் கடலெச்சத்தில்
என் கால்கள் இரண்டையும்
அவிழ்த்து விட
துள்ளிக் குதித்தன அவைகள்
-
ஐம்புலன்களும்
நனைந்து நடுங்கிட
ஈர உடலில்
காதல் கொண்ட கீழைக் காற்று
மெல்ல அனணத்தது
-
பற்கள் கட கட
சொற்கள் தட தட
உள்ளங்கைகளில்
நெருப்பினை கொடுத்தாலும்
பொக்கிசமாய்
பொத்திக் கொள்வேன் போல
அப்படி ஓர் குளிர்
-
அவ்விடம் விட்டு
நகர்கிறேன்
அழையாது ஒட்டிக்கொண்ட
களவாணி மணல் துகள்களை
என்ன செய்வது…
-
தட்டி விட மனமில்லை
ஆகவே உடனழைத்துச் சென்றேன்
என்றும் மிதிக்கப்படும்
அவர்கள்
அன்று மதிக்கப்பட்டு
என் வீட்டின் விருந்தாளி ஆனார்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக