வெள்ளி, 2 நவம்பர், 2012
வரம் கொடு
நீ இன்றி அலைகிறேன் – இந்த உலகிலே
தீ இன்றி எரிகிறேன் – பனி இரவிலே
-
உலகமே விடிந்தது உன் வருகையில் – என்
இதயமே குளிர்ந்தது நீ சிரிக்கையில்
உதிரமே உறைந்தது உனை நினைக்கையில்
நின்னுருவமே பிறந்தது கிறுக்கையில்
-
பூ ஒன்று விழுந்தது எந்தன் விழியிலே
நீ என்று புரிந்தது அந்த நொடியிலெ……..
-
விண்ணிலே மின்னுகின்ற விண்மீனெல்லாம் – உந்தன்
கண்ணில் கண்டேன் அன்பே கண்ணில் கண்டேன்.
கண்களில் கலந்திருந்த சோகமெல்லாம்
விண்ணில் கண்டேன் அன்பே விண்ணில் கண்டேன்
-
மனதில் சிறிதாய் மலர்கள் மலர்ந்திட
இடம் கொடு கொஞ்சம் உரமிடு
கனவில் உன்னுடன் பழகி கழித்திட
வரம் கொடு உந்தன் கரம் கொடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக