சனி, 3 நவம்பர், 2012

என் கிராமத்தின் நுழைவாயில்















அன்றிரவு
தூறிக் கொண்டிருந்தது
சல்லடை மழை
-
காற்றும் மரமும்
ஏனோ அங்கே
பேசிக்கொள்ளவில்லை
-
மழையுடன் சண்டையிட்டு
புண்ணாய்ப் போன
அந்த நெடிய பாதையில்
துணையாய் வந்த
பிறை நிலவும்
துளி நேரத்தில்
திருடப்பட்டது
-
யாருமற்ற அந்த வழியில்
யாருக்காகவோ
விழித்திருந்தன
பார்வை மங்கிய
சாலையோர மின் விளக்குகள்
-
எல்லோரையும்
அன்புடன் வரவேற்கும்
என் கிராமத்தின்
நுழைவாயில்
அன்று என்னையும்
வரவேற்றது
உடைந்து போன
பெயர்ப் பலகையுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக