திங்கள், 8 அக்டோபர், 2012

நான் யாரோ தான் உனக்கு….


















யாரோ நீ என்று விலகி

இருக்க முடியவில்லை

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

பார்த்திடும் தூரத்திலே உன் விழி

கேட்டிடும் தூரத்திலே உன் செவி

சேர்ந்திடும் தூரத்திலே உன் விரல்

பழகிடும் தூரத்திலே உன் நட்பு

என்ன செய்திட முடியும் என்னால்

உன்னைச் சுற்றி எப்போதும்

உன் நண்பர்கள் கூட்டம்

நிழல் போல உன்னை

விட்டு பிரிவதில்லை

உள்ளங்கைகளில் உன்னை

முப்பொழுதும் தாங்குகிறார்கள்

நீ விக்கிடும் நேரத்திற்காய்

கழுகாய் காத்திருக்கிறார்கள்

உனக்கு பிடித்திடும் விசயங்களை

முந்திச்செய்கிறார்கள்

உன்னை தொட்டுசிரித்து

பேசிட நினைக்கிறார்கள்

ஆகவே உன் கண்களில் நான்

அகப்படமாட்டேன்.

அவர்கள் உன்னை வட்டமிடும்

விண்மீன்களாகத் தெரியலாம்

உனக்கு,

ஆனால் என் கண்களுக்கு

அவர்கள் வெறும் மேகங்களே,

சீக்கிரம் உன்னைக்கடந்து

மறைவார்கள்.

நீயும் ஏன் ஓர் அநாதயாய்

பிறந்திருக்ககூடாது

காற்றைப்போல்

என்றும் எங்கும்

சுதந்திரமாய்இரு….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக