நீர் இன்றி தீராதோ தாகம்
நீ இன்றி போகாதோ நேரம்
விக்கலுக்கு நீர் போல்-மன
சிக்கலுக்கு நீ வேண்டும்
நீர் இன்றி பூக்காதோ பூக்கள்
நீ இன்றி தோன்றாதோ பாக்கள்
சித்திரைக்கு நீர் போல்-என்
நித்திரைக்கு நீ வேண்டும்
நீர் இன்றி அனையதோ நெருப்பு
நீ இன்றி குறையாதோ வெறுப்பு
கல்லனைக்கு நீர் போல்-என்
சிந்தனைக்கு நீ வேண்டும்
நீர் இன்றி அமையாது உலகு-என்றும்
நீ இன்றி அடங்காது உயிரு
நீரும், நீயும் என் நீங்கா உறவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக