வியாழன், 25 அக்டோபர், 2012
அந்திவேளை
கவலை மறந்து
கண்கள் ஒய்ந்திடும் நேரம்
பசியை மறந்து
கனவுகள் போயிடும் தூரம்
-
கையில் பணமின்றி
காலில் பலமின்றி
பசியும், நோயும்
வந்தால் தூக்கமேது
இந்த அந்திவேளையில்
-
என்றுமே கண்டிராத நள்ளிரவு
நிலவும் இல்லாத பின்னிரவு
நொடிகள் கூட
யுகங்கள் போல நகர்கிறது
குவளை தண்ணீர்
அமிர்தம் போல இனிக்கிறது
-
வழியெங்கும்
வாடை காற்று
தவளை கூச்சல்
ஆந்தை முறைப்பு
வவ்வால் ஆட்டம்
எல்லாம் நிலைக்கிறது
-
உணர்வின்றி புலம்பிடும்
உதடுகளில் ஈரமில்லை
தூக்கமின்றி கிறங்கிடும்
விழிகளில் ஊக்கமில்லை
-
பற்றிக்கொள்ள கிளையுமில்லை
பாதி உயிரும் உடம்பில்லை
-
சுமைகளைத் தாங்கிட
ஜீவனில்லாத உடலுக்கு
ஏன் இந்தப் பிறவியோ
-
பேசத் துணையின்றி
தேடத் திறனின்றி
பசியும் நோயும் வந்தால்
இந்த அந்திவேளை
எப்படி விடிந்திடும்
-
அநாதையாய் பிறந்திருந்தால்
என்றோ இறந்திருக்கலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக