புதன், 6 பிப்ரவரி, 2013

இளவேனிற்ச் சாரல்






















இளவேனில் மாலை
பறவைகள் கூடுகளில்
கீச்சல்கள் காதுகளில்
செங்கதிர் மறைந்து
செவ்வானம் அவிழ
செம்மண் தரையில்
செங்காந்தள் தவழ
ஆடிடும் மயிலே
ஓடிடும் வெயிலே
கலகல ஆலம்
சலசல வாழை
திருதிரு தென்னை
படபட மின்னல்
சடசட சாரல்
நடத்திடு வானே
நனைந்திட நானே
துவட்டிடும் கைகள்
சுடச்சுட தேநீர்
கொடுத்திடும் வேளை
துருதுரு மழையை
கலைத்தது கனவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக