திங்கள், 29 ஏப்ரல், 2013

உன்னோடு





உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?
கண்ணோடு கலந்திடும் யோகம் உண்டா?
என்னோடு நீயும் பேசிச் சென்றால்
தூங்காதே அந்த இரவுகள்

இன்றோடு விடிந்திடும் காலம் மெய்யா?
விண்ணோடு முடிந்திடும் வானம் பொய்யா?
என்னோடு நீயும் நேசம் கொண்டால்
நீங்காதே உந்தன் நினைவுகள்

உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?
                  
மனம் எங்கெங்கும் நீயே
வலம், இடம் எங்கெங்கும் நீயே தான்
            
இரவிலும், இன்பக் கனவிலும் வந்து 
உறைபவள் நீயே நீயே
வலையிலும், துள்ளும் அலையிலும்
இழுத்தவள் நீயே நீயே

சிரிப்பதும், பின்பு முறைப்பதும்          
விருப்பதும், பின்பு வெறுப்பதும்
நீயே நீயே
      
உன்னோடு கழிந்திடும் நேரம் உண்டா?     
கண்ணோடு கலந்திடும் யோகம் உண்டா?
என்னோடு நீயும் பேசிச் சென்றால்
தூங்காதே எந்தன் இரவுகள்

இன்றோடு விடிந்திடும் காலம் மெய்யா?
விண்ணோடு முடிந்திடும் வானம் பொய்யா?
என்னோடு நீயும் நேசம் கொண்டால்
நீங்காதே உந்தன் நினைவுகள்.............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக