உனக்காக
நான் படும் பாட்டைத்தான்
இங்கே எல்லோரும் படுகிறார்கள்.
காலத்தைக்
கூட வென்று விடலாம் போல
உன்னை வெல்ல முடியவில்லையே....
விதியைக்
கூட மாற்றி விடலாம் போல
உன்னை மாற்ற முடியவில்லையே....
நல்ல உறவுகளைப் பிரிக்கிறாய்
நல்ல நினைவுகளை அழிக்கிறாய்
பத்தல்ல
பத்தாயிரம் செய்கிறாய்
பாதாலமல்ல
பரலோகமே பாய்கிறாய்
தவழ நீ தேவை
வளரவும்
நீ தேவை
படிக்க
நீ தேவை
பழகவும்
நீ தேவை
மணக்க நீ தேவை
மதிக்கவும்
நீ தேவை
பிறக்க
நீ...
பிழைக்க
நீ...
புதைக்கவும்
நீ தேவைப்படுகிறாய்
உன்னை மிதிப்பவர்களை
நீ மதிக்கிறாய்
உன்னை மதிப்பவர்களை
நீ மிதிக்கிறாய்
நியாபகம்
இருக்கட்டும்
வயிற்றில்
பசி உள்ள வரை மட்டுமே
இம் மண்ணில் நீ
தெய்வமென
பிழைத்து கிடப்பாய்

Nice lines....
பதிலளிநீக்குNandri
நீக்கு